பேருந்து மீது மோதிய ரெயில் - பயணிகளின் நிலை என்ன? - Seithipunal
Seithipunal


பேருந்து மீது மோதிய ரெயில் - பயணிகளின் நிலை என்ன?

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடான சிலியில் கான்செப்சியொன் மாகாணம் சன் பெட்ரொ டி லா பாஹ நகரில் நேற்று இரவு பதினான்கு பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.

இந்தப் பேருந்து அந்நகரின் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயற்சி செய்தபோது, அந்த நேரத்தில் வேகமாக வந்த ரயில் எதிர்பாராதவிதமாக பேருந்துமீது மோதியது. 

மேலும், ரயில் அந்தப் பேருந்தை சில மீட்டர்கள் தூரம் இழுத்து சென்றது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் ஏழு பயணிகள் உயிரிழந்தனர். மேலும், ஏழு பேர் படுகாயமடைந்தனர். 

இந்த விபத்துக் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

அதன் பின்னர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து, போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seven passengers died for train and bus accident in sili


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->