ஒன்றரை நூற்றாண்டில் இல்லாத மாற்றம்... அதிர்ச்சி தகவலை தெரிவித்த விஞ்ஞானிகள்.! - Seithipunal
Seithipunal


கடந்த 140 வருடங்களில் இல்லாத அளவுக்கு, அதிகளவு வெப்பம் செப்டம்பர் மாதத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் பருவநிலை மாற்றங்கள் மற்றும் அதிகளவு வெப்பம் உயர்வு தொடர்பான பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இந்த விஷயங்கள் தொடர்பாக அவ்வப்போது தங்களின் ஆராய்ச்சி தகவலையும் பகிர்ந்து எச்சரிக்கையை செய்து வருகின்றனர். 

இந்நிலையில், 20 ஆம் நூற்றாண்டில் பதிவான சராசரியான வெப்பநிலை, கடந்த செப்டம்பர் மாதத்தில் 1.7 டிகிரி பாரன் ஹீட் அதிகளவு வெப்பம் பதிவாகியிருப்பதாக அமெரிக்க வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

மத்திய கிழக்கு ஆசியா, சைபீரியா, தென் அமெரிக்கா போன்ற பகுதியிலும் அதிகளவு வெப்பம் நிலவியுள்ளதாகவும், பல்வேறு இடங்களில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணத்தால் வெப்பம் அதிகளவு பதிவாகி உள்ளதற்கு முக்கிய காரணம் என்றும் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Scientist explain about Global heat increased now comparing last 140 years


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->