பென்குயின்களை இனிமேல் பார்க்க முடியாது..? எல்லாம் அழிந்து வருகிறது: ஆய்வாளர்கள் எச்சரிக்கை..!
Researchers warn that emperor penguins could become extinct
பருவநிலை மாற்றத்தால் புவி வெப்பநிலை உயர்வடைகிறது. இதனால் அன்டார்டிகா பனிப்பாறைகள் வேகமாக உருகும் அபாயத்தில் உள்ளது. இந்நிலையில், பிரிட்டிஷ், அன்டார்டிகா குழுவினர் செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்து சுற்றுச்சூழல் இதழில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அன்டார்டிகாவின் பனிப்பாறைகள் மற்றும் அதை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் எம்பரர் பென்குயின்கள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. இந்த பென்குயின்களில் மிகவும் உயரமானது என்பதால் எம்பரர் பென்குயின் எனப்படுகிறது. இது, 04 அடி உயரம் வரை வளரக்கூடியது.

கடந்த 2009 முதல் இங்கு உள்ள பென்குயின்களின் 16 காலனிகளை பிரிட்டிஷ் அன்டார்டிகா ஆய்வு குழு, செயற்கைக்கோள் உதவியுடன் கண்காணித்து வருகிறது. தற்போது, குறித்த பென்குயின்கள் குஞ்சு பொறிப்பில் பாதிப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அத்துடன், 2009-இல் ஆய்வாளர்கள் அன்டார்க்டிகாவில் உள்ள பென்குயின்களில் 9.5 சதவீதம் அழியும் என கணித்திருந்தனர்.
இந்நிலையில், முந்தைய கணிப்பை காட்டிலும் தற்போது குறித்த பென்குயின்கள் மிக அதிகமாக 22 சதவீதம் அளவுக்கு அழிந்துள்ளதாக பிரிட்டிஷ், அன்டார்டிகா குழுவினர் சுற்றுச்சூழல் இதழில் கட்டுரையில் கூறியுள்ளனர்.

அத்துடன், 2022-இல், அன்டார்டிகாவின் பெலிங்ஷாஸன் கடலின் மேற்பரப்பில் இருந்த பனி முன்கூட்டியே உடைந்துள்ளதால், அங்கு முட்டையிலிருந்து பொறிந்த ஆயிரக்கணக்கான பென்குயின் குஞ்சுகள் இறந்தன என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
இவை பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை தெளிவாக காட்டுகிறதாகவும், கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு போன்ற பசுமை இல்ல வாயுக்களை கட்டுப்படுத்தப்படாவிட்டால், இந்த நுாற்றாண்டின் இறுதிக்குள் எம்பரர் பென்குயின்கள் அழிந்து போகலாம் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
English Summary
Researchers warn that emperor penguins could become extinct