பொருளாதார நெருக்கடி: இலங்கை மீண்டு வருகிறது - அதிபர் ரணில் விக்கிரமசிங்கே - Seithipunal
Seithipunal


இந்தியாவின் அண்டை நாடான இலங்கை அரசியல் குழப்பம் மற்றும் பண வீக்கத்தால் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்ற பின் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை அரசு மீள்வதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதாக ரணில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசும் பொழுது,

இலங்கையின் பணவீக்க பொருளாதார கொள்கையை செயல்படுத்தியதன் மூலம் பணவீக்கம் குறைந்து வருகிறது. 70% ஆக இருந்த பணவீக்கம் தற்பொழுது 25.2% ஆக குறைந்துள்ளது. இதையடுத்து அத்தியாவசிய பொருட்களின் விலை நீண்ட நாட்களுக்குப் பிறகு குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இலங்கையின் மத்திய வங்கி கடந்த மூன்று ஆண்டுகளில் முதன் முறையாக வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. இதுவே இலங்கையின் பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வருவதற்கு அடையாளமாக காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

President Ranil says srilankan is recovering from economic crisis


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->