பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 07 பேர் பலி; சுனாமி எச்சரிக்கையால் பீதி..!
Powerful earthquake kills 7 in the Philippines
பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் டாவோ ஓரியன்டல் பகுதியில் உள்ள மனய் நகரில் இன்று 7.4 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவிற்கான சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தினால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 07 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 07 மணிநேரம் கழித்து, மீண்டும் அதே பகுதிக்கு சக்தி வாய்ந்த நிலஅதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. இதனால், வீடுகள் மற்றும் உயரமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கி 07 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாய மடைந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் அரசு நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
English Summary
Powerful earthquake kills 7 in the Philippines