வடகொரியா 130 பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் - தென்கொரியா குற்றச்சாட்டு - Seithipunal
Seithipunal


தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் கூட்டு ராணுவ பயிற்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்த வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து அச்சுறுத்தி வருகிறது. இதனால் வடகொரியா மற்றும் தென்கொரியாவுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் பியாங்யாங்கின் பகிரப்பட்ட எல்லைக்கு அருகே வடகொரியா வெளிப்படையான இராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாக இன்று கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளுக்கு அப்பால் கடலில் சுமார் 130 பீரங்கி குண்டுகளை வீசியதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு இரு நாடுகள் இடையே மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும் வட கொரிய ராணுவத்தின் நடவடிக்கைகளை தென் கொரிய மற்றும் அமெரிக்க ராணுவங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது என்றும், வடகொரியா தாக்குதல் நடத்தினால் பதில் கொடுக்க தயார் நிலையில் உள்ளதாக தென் கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

North Korea fires over 130 artillery rounds


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->