பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு. நைஜரில் இரு இந்தியர்கள் சுட்டுக்கொலை! .
Niger terrorist attack 2 Indians killed
மேற்கு ஆப்பிரிக்காவின் நைஜரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் உயிரிழந்ததும், ஒருவர் கடத்தப்பட்டதுமான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜரில் உள்ள இந்திய தூதரகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
நைஜர் தலைநகர் நியாமி அருகே உள்ள டோசோ பகுதியில் உள்ள கட்டுமானத் தளத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த ராணுவத்தினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பணியாற்றி வந்த இரண்டு இந்தியர்கள் உயிரிழந்தனர். மேலும், அவர்களுடன் இருந்த ஒருவரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.
இந்த சம்பவம் ஜூலை 15ஆம் தேதி இடம்பெற்றதாகத் தூதரகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த இந்தியர்களின் உடல்கள் விரைவில் நாட்டிற்கு கொண்டு வரப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், கடத்தப்பட்ட நபரை மீட்கவும் தீவிர முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், நைஜரில் வசிக்கும் மற்ற இந்தியர்கள் பாதுகாப்பாகவும், அதிக எச்சரிக்கையுடனும் இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
English Summary
Niger terrorist attack 2 Indians killed