திரு.வால்ட் விட்மன் அவர்கள் பிறந்ததினம்!.
Mr Walt Whitman was born on this day
அடிமை வியாபாரத்தை எதிர்த்தவரான 'வசனநடை கவிதையின் தந்தை' திரு.வால்ட் விட்மன் அவர்கள் பிறந்ததினம்!.
அடிமை வியாபாரத்தை எதிர்த்தவரான வசனநடை கவிதையின் தந்தை வால்ட் விட்மன் (Walt Whitman) 1819ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம் ஹன்டிங்டனில் பிறந்தார்.
இவர் சாங் ஆஃப் மைசெல்ஃப் என்ற கவிதை நூலையும், பிராங்க்ளின் இவான்ஸ் என்ற நாவலையும் எழுதியுள்ளார். அடிமைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்து Free Soil (சுதந்திர பூமி) என்ற பத்திரிக்கையை தொடங்கினார்.
கருப்பின மக்களை அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்க ஆபிரஹாம் லிங்கன் எடுத்த நடவடிக்கைகளை தொடர்ந்து, அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கியது.

போர் வெற்றி பெற்ற 5-ம் நாளில் ஆபிரஹாம் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த மனவேதனையில் விட்மன் எழுதிய ஓ கேப்டன், மை கேப்டன் என்ற இரங்கற்பா, படிப்போரை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.
பல போராட்டங்களை கடந்து தனக்கான அங்கீகாரத்தை பெற்ற புரட்சிக்கவிஞர் வால்ட் விட்மன் 72வது வயதில் (1892) மார்ச் 26 ஆம் தேதி அன்று மறைந்தார்.
English Summary
Mr Walt Whitman was born on this day