இந்தியாவில் 3,500-ஐ தாண்டியுள்ள கொரோனா பாதிப்பு; 02 பேர் உயிரிழப்பு: மருத்துவர்கள் எச்சரிக்கை..!
02 people die of corona in India number of infected people increases to 3500
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி, தொற்றால் இருவர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,758-ஐ தாண்டியுள்ளது. இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவிற்கு மேலும் 360 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,758 ஆக அதிகரித்துள்ளது.
இதில், கேரளாவில் 1,400 பேரும், மஹாராஷ்டிராவில் 485 பேரும், டில்லியில் 436 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த கொரோனா காரணமாக கேரளா மற்றும் கர்நாடகாவில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.
English Summary
02 people die of corona in India number of infected people increases to 3500