பதவிக்காக கமல்ஹாசன் எப்படி வேண்டுமானாலும் பேசுவார்: தீப்பற்றி எரிந்தாலும் அவருக்கு கவலையில்லை: ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி..!
Governor CP Radhakrishnan says Kamal Haasan will speak in any way he wants for the post
எந்த தீவிரவாதமாக இருந்தாலும் சரி, இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும். அப்போதுதான் தேசத்தின் வளர்ச்சி மற்றும் அமைதிக்கு அது உதவும் என்று மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இன்று கோவை விமான நிலையத்தில், நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு எவ்வளவு தந்தாலும் அதைப் போற்றுவதற்கு சிலருக்கு மனம் வருவதில்லை என்றும், மத்திய அரசோடு இணைந்து செயல்படுவது தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு உதவும் எனவும் தமிழக ஆளுநரை பொறுத்தவரையில் மிக, மிக நேர்மையானவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஆளுநர் அவரது கடமையை மிக நேர்த்தியாக செய்து வருகிறார். அவருக்கு நல்ல ஒத்துழைப்பை மாநில அரசு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அப்போதுதான் தமிழகத்தின் நலனிற்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும் என்றும், தமிழகத்தில் டாஸ்மாக் பிரச்சினை அதிகமாக இருக்கின்றது என்பது வருத்தத்திற்குரிய ஒன்று என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தமிழக அரசு முதலில் கஞ்சாவை ஒழிப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், ஒன்றிய அரசு என்று சொல்வதே முதலில் தவறு. மத்திய அரசு என்று தான் சொல்ல வேண்டும். நீங்கள் வேண்டுமென்றே பிரிவினைவாதத்தை திணிக்கிறீர்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நடிகர் கமல்ஹாசன் என்றைக்காவது ஒன்றை ஒழுங்காக சொல்லி இருக்கிறாரா? திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒழிப்பது தான் என்னுடைய வேலை என்று இயக்கத்தை ஆரம்பித்தார். ஆனால், இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தோடு இருப்பதுதான் தமிழகத்திற்கு நன்மை பயக்கும் என்று சொல்கிறார்.
இவருக்கு எது நன்மை பயக்குகிறதோ, அது தமிழகத்தின் நன்மை என்று நினைக்கிறவர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பதவிக்காக அவர் அப்படி பேசி இருக்கிறார். இங்கே தீப்பற்றி எரிந்தாலும் அதைப்பற்றி அவருக்கு கவலை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தனக்கு பதவி வேண்டும் என்று நினைக்கின்ற மனிதராக கமல் இருக்கிறார். அத்துடன், முருக பக்தர்கள் மாநாடு நடத்துகிறார்கள். அதற்கு பாதுகாப்பு தருவது தமிழக அரசின் கடமை. என்று நிருபர்களிடம் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Governor CP Radhakrishnan says Kamal Haasan will speak in any way he wants for the post