பெண் கழுத்தை அறுத்துக்கொலை..தோல் வியாபாரி கைது! - Seithipunal
Seithipunal


வீடுபுகுந்து பெண்ணை  கழுத்தை அறுத்துக் கொலை செய்த தோல் வியாபாரியை போலீசார்  கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே பனையடிப்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சலூன் கடைக்காரர் பரமசிவன். இவருடைய மனைவி உமா,சம்பவத்தன்று நேற்று முன்தினம் அதிகாலையில் கணவர் பரமசிவன் வெளியே சென்றதை நோட்டமிட்ட மர்மநபர் வீட்டுக்குள் நைசாக புகுந்த திடீரென்று உமாவை கழுத்தை அறுத்துக்கொலை செய்து விட்டு தப்பி சென்றார். 

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தநிலையில் உமாவின் கணவர் பரமசிவன் போலீசில் பரபரப்பு புகார் மனு அளித்தார். அதில், எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் தோல் வியாபாரியான மணிகுமார்எனது மனைவி உமாவிடம் நட்பாக பழகி வந்ததை நிறுத்தி விட்டார். தொடர்ந்து மணிகுமார்  உமாவிடம் தொல்லை கொடுத்து மிரட்டி வந்ததால் போலீசில் புகார் அளிக்க இருந்தேன். 

இதனை அறிந்த மணிகுமார் வீடுபுகுந்து உமாவை கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாக அந்த புகார் மனுவில் தெரிவித்து இருந்தார். இதையடுத்து தலைமறைவான  தோல் வியாபாரி மணிகுமாரை பாவூர்சத்திரம் போலீசார் சற்று முன் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Woman stabbed to death Leather dealer arrested


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->