மகாராஷ்டிராவில் சோகம் : குழந்தை இல்லை என்று மனைவியை கொலை செய்த கணவர்.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவில் சோகம் : குழந்தை இல்லை என்று மனைவியை கொலை செய்த கணவர்.!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம் ஆம்பர்நாத் பகுதியில் தொழிற்சாலை காலனியைச் சேர்ந்தவர் ரோனித்ராஜ். இவருக்குத் திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. 

இது தொடர்பாக தம்பதியினருக்கு இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், இருவருக்கும் இடையே வழக்கம்போல் நேற்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறு சிறிது நேரத்தில் முற்றியதில், ஆத்திரமடைந்த ரோனித்ராஜ் ஆயுதத்தால் மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். 

இதனால் பலத்தக் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் ரோனித்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை இல்லை என்பதற்காக மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for kill wife in maharastra


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->