இங்கிலாந்தில் கேரள பெண், 2 குழந்தைகள் படுகொலை.! கணவர் கைது.! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தின் நார்த்தம்டன்ஷைன் பகுதியில் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்தப் பெண் கெட்டரிங் பொது மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தார். 

இந்நிலையில் நேற்று அந்தப் பெண் மருத்துவமனைக்கு வேலைக்கு செல்லாததால், மருத்துவமனையின் நிர்வாகிகள் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் செல்போனை எடுத்து பேசாததால் மருத்துவமனை நிர்வாகிகள் அவர் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்.

அப்பொழுது அங்கு நர்ஸும் அவரது இரண்டு குழந்தைகளும் பிணமாக கிடந்துள்ளனர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதில் நர்சும், அவரது குழந்தையும் கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நர்ஸ் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்தது யார்? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் நர்சின் கணவரையும் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala woman 2 children murdered in England


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->