முதியோரை தாக்கிக் கொன்ற வளர்ப்பு கங்காரு.! 86 ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்ட பீதி.! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட கங்காரு, சாதுவான விலங்காக மக்களால் கருதப்படும். ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் மக்கள் தொகை குறைவாக இருக்கும் நகரில் 77 வயது முதியவர் ஒருவர் கடுமையான காயங்களுடன் தனது வீட்டில் கிடந்தார். 

இது குறித்து உறவினர் ஒருவர் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்த நிலையில் அவரை மீட்க மருத்துவ குழு வீட்டிற்கு சென்றபோது கங்காரு ஒன்று தடுத்துள்ளது. ஆனால், அதை மீறி உள்ளே செல்ல முயற்சித்த போது அந்த கங்காரு சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளது. 

கேரளா || தொடர்ந்து கனமழை.. வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இளம்பெண்  பரிதாப பலி..! - Seithipunal

பின்னர் இது குறித்த விசாரணையில் முதியவர் கங்காருவை செல்லப் பிராணியாக வளர்த்து வந்துள்ளார் என்றும், காயங்களுடன் சிகிச்சை பெற்ற அவர் உயிரிழந்து இருப்பதற்கு கங்காரு தான் காரணம் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. 

சாதுவான விலங்காக பார்க்கப்படும் கங்காரு தாக்கி ஒரு முதியவர் உயிரிழந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதற்கு முன்பு 1936 இல் நியூ சவுத் வேல்ஸ் நகரில் ஒரு நபர் கங்காரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். அதன் பின்னர் 86 ஆண்டுகளுக்குப் பின் இந்த சம்பவம் தற்போது நடந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kangaroo killed 77 years old men in Australia


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->