முக்கிய புள்ளியை போட்டு தள்ளியது யார்? அதிர்ச்சியில் உலக நாடுகள்! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேல் ராணுவத்தினர் மற்றும் மக்கள் பலியகினர். 

இதனை தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக ஒழிப்பதே எங்கள் முதல் இலக்கு என்று இஸ்ரேல் ராணுவம் தீவிரமாக இந்த போரை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த போரில் குழந்தைகள், பெண்கள் என 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை கொலை செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் இஸ்மாயில் ஹனியே, இன்று அதிகாலை கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

ஈரான் நாட்டின் தலைநகர் டெக்ரான் பகுதியில், அவரின் வீட்டில் வைத்தே இஸ்மாயில் ஹனியே கொலை செய்யப்பட்டதாகவும், அவருடைய பாதுகாவலர் ஒருவரும் இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் இந்த படுகொலை சம்பவத்தை ஈரான் நாடு மற்றும் ஹமாஸ் அமைப்பு உறுதிப்படுத்தி உள்ளது. இது குறித்து ஹமாஸ் அமைப்பு விடுத்துள்ள தகவலின் அடிப்படையில், இஸ்மாயில் ஹனியே அவரின் இல்லத்தில் இருக்கும்போதே நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதே போல் ஈரான் நாட்டின் புரட்சிகர காவல் படை வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், ஹமாஸ் இயக்கத்தின் தலைவரான இஸ்மாயில் ஹனியே வீடு தாக்கப்பட்டது. இதில் அவரும், அவருடைய பாதுகாப்பாளரும் வீர மரணம் அடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது வரை இந்த கொலையை செய்தது யார் என்ற தகவல் வெளியாகவில்லை. இருப்பிடம் 62 வயதாகும் இஸ்மாயில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Israel Hamas War Hamas ismayil


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->