ஈரானில் அரசு அதிகாரிகள் லேப்டாப் மற்றும் மொபைல் போன்கள் பயன்படுத்த தடை..!
Government officials in Iran are banned from using laptops and mobile phones
ஈரானில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசு அதிகாரிகள் லேப்டாப், மொபைல் போன்களை பயன்படுத்த ஈரான் தடை விதித்துள்ளது. லெபனானில் ஹிஸ்புல்லா படையினர் பயன்படுத்திய வாக்கி டாக்கியை ஒரே நேரத்தில் இஸ்ரேல் வெடிக்க செய்த நிலையில்,ஈரான் இந்த நடவடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலுக்கு எதிராக பயங்கரவாத அமைப்புகளை துாண்டிவிட்டு, ஈரான் குடைச்சல் கொடுத்து வருகிறது. குறிப்பாக, ஈரான் தன்னை குறிவைத்து தான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட முயற்சிக்கிறது என்ற எண்ணம் இஸ்ரேலிடம் பரவலாக உள்ளது.

இவ்வாறு ஈரான், அணுகுண்டு தயாரித்து விட்டால், அது தங்களுக்கு பேராபத்தாக முடிந்துவிடும் என்ற எண்ணத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரானும், இஸ்ரேல் மீது ஏவுகணை வீசி தாக்குதலில் நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஈரான் அணுஆயுத நிலைகளை தாக்குவதற்கு சக்தி வாய்ந்த குண்டுகளை அமெரிக்காவிடம் இஸ்ரேல் கேட்டுள்ள நிலையில் அந்த ரகசியங்களை தெரிந்து கொள்ள இஸ்ரேல் டிஜிட்டல் கண்காணிப்பை மேற்கொள்ளலாம் என ஈரான் அஞ்சுவதால், அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களுடைய பாதுகாவலர்கள் லேப்டாப் மற்றும் மொபைல் போன்களை பயன்படுத்த ஈரான் தடை விதித்துள்ளது.
English Summary
Government officials in Iran are banned from using laptops and mobile phones