இத்தாலியில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.! 15 பேர் காயம் - Seithipunal
Seithipunal


இத்தாலியில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

இத்தாலியின் மிலன் பகுதியில் தென்கிழக்கே உள்ள சான் கியுலியானோ மிலனீஸ் நகரில் ரசாயன பொருட்களை உற்பத்தி செய்யும் நைட்ரோல்சிமிகா நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த தீயானது மலமலவென கொழுந்துவிட்டு எரிந்து ஆலை முழுவதும் வேகமாக பரவியது.

மேலும் ஆலையில் உள்ள பொருட்கள் வெடித்து சிதறி, அப்பகுதி முழுவதும் அடர்த்தியான கரும்பு புகை சூழ்ந்தது.

இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட அவசர கால பணியாளர்கள் மற்றும் 10 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தின் போது ஆலையில் இருந்த 15 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fire broke out in Italy chemical plant


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->