உ.பியில் சோகம் :- மோட்டாரை சரி செய்ய கிணற்றிற்குள் இறங்கிய தந்தை, மகன்கள் பிணமாக மீட்பு.! - Seithipunal
Seithipunal


உ.பியில் சோகம் :- மோட்டாரை சரி செய்ய கிணற்றிற்குள் இறங்கிய தந்தை, மகன்கள் பலி.!

உத்தர பிரதேசம் மாநிலத்தில் நேற்று மாலை வீரேந்திர குமார் என்பவர் மோட்டாரை சரிசெய்வதற்காக கிணற்றில் இறங்கியுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் மேலே வராததால் சந்தேகமடைந்த அவருடைய இரண்டு மகன்களும் கிணற்றில் இறங்கி தேடியுள்ளனர்.

ஆனால், அவர்களும் நீண்ட நேரமாகியும் கிணற்றில் இருந்து மேலே வரவில்லை. இதைப்பார்த்த வீரேந்திர குமாரின் மனைவி உதவி கேட்டு சத்தம் போட்டு கூச்சலிட்டுள்ளார். இந்த சத்தம் கேட்டு, அருகில் இருந்த கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். 

பின்னர் கிணற்றில் இறங்கிய கிராம மக்கள், மயங்கிய நிலையில் இருந்த தந்தை மற்றும் இரண்டு மகன்களையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அதன் பின்னர் அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் மூன்று பேரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு மருத்துவமனை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் படி அவர்கள் விரைந்து சென்று மூன்று பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஒரே வீட்டில் தந்தை மகன்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

father and sons died for poison gas attack in uttar pradesh


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->