தீவிரவாத பட்டியலில் இணைத்ததால் இருக்குமோ! பேஸ்புக் ஓனருக்கே இந்த நிலையா!
Facebook Users are lost most of followers
பேஸ்புக்கில் வந்த சுனாமியால் பாலோவர்சை இழந்த பயனாளிகள்!
உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பல பயனாளர்கள் தங்களை பின்தொடர்ந்து வந்த பாலோயிர்களை திடீரென எழுந்துள்ளனர். இது குறித்து பேஸ்புக்கின் தாய் நிறுவமான மெட்டா நிறுவனம் எந்தவித விளக்கத்தையும் அளிக்கவில்லை. மெட்டா நிறுவனரும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பெர்க் தன்னைப் பின்தொடர்ந்து வந்த 119 மில்லியனுக்கும் அதிகமான பாலோயகர்களை இழந்துள்ளார். தற்பொழுது அவரை பின் தொடர்வோர் எண்ணிக்கை பத்தாயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது. இச்சம்பம் தொடர்பாக பல்வேறு புகார்கள் உலகம் முழுவதும் எழுந்த வண்ணம் உள்ளன.

இரு தினங்களுக்கு முன்பு ரஷ்ய நாடு பேஸ்புக்கை தீவிரவாத பட்டியலில் இணைத்திருந்தது. பேஸ்புக் பயனாளர்கள் ரஷ்யாவுக்கு எதிராக பதிவிடும் கருத்துக்களை ஊக்குவிக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனம் அனுமதித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக மாஸ்கோ நீதிமன்றம் பேஸ்புக் நிறுவனத்திற்கு தடை விதித்தது. இதன் காரணமாக பேஸ்புக்கில் உள்ள பாலோயிஸ்களின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம் என பரவலாக பேசப்படுகிறது. இது தொடர்பாக மெட்டா நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில் "சில தங்கள் பேஸ்புக் கணக்கில் சீரற்ற பெண் தொடர்புகளின் எண்ணிக்கை இருக்கும் விவரம் தொடர்பாக நாங்கள் அறிவோம். முடிந்தவரை விரைவாக விவகாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர பணியாற்றி வருகிறோம் தங்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம்" என தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
English Summary
Facebook Users are lost most of followers