கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவரை கொன்ற சி ஆர் பி எப் போலீஸ் - தீவிர விசாரணையில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவரை கொன்ற சி ஆர் பி எப் போலீஸ் - தீவிர விசாரணையில் போலீசார்.!

நாட்டின் தலைநகரான டெல்லியில் சிஆர்பிஎப் - இல் பணிபுரிபவர் பூனம் ஜாட். திருமணமான இவருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரத்பூர் மாவட்டம் மன்சூர் கிராமத்தைச் சேர்ந்த சக சிஆர்பிஎஃப் காவலரான ராம்பிரதாப் குர்ஜார் என்பவருக்கும் தகாத உறவு ஏற்பட்டது.

பூனம் ஜாட் நாகலாந்தில் பணிபுரிந்து வரும் ராம் பிரதாபை அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளார். அப்போது தனது கணவர் சஞ்சய் குமாரை கொலை செய்ய வேண்டும் என்று பூனம் ஜாட் ராம் பிரதாப்பிடம் தெரிவித்துள்ளார்.

அதன்படி அவர்கள் இருவரும் டெல்லியில் சஞ்சய் குமாரை கொலை செய்துவிட்டு அவரது உடலை ராஜஸ்தானில் உள்ள பரத்பூர் மாவட்டத்தில் புதைத்துள்ளனர். இந்த நிலையில் சஞ்சய் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின்படி டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையே சஞ்சய் குமாரின் மனைவி பூனம் ஜாட் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

அதன்படி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் பூனம் ஜாட் தனது ஆண் நண்பர் ராம் பிரதாப்புடன் சேர்ந்து கணவரை டெல்லியில் கொலை செய்து ராஜஸ்தானில் புதைத்ததாக தெரிவித்துள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் பரத்பூர் மாவட்டத்தில் புதைக்கப்பட்ட சஞ்சய் குமாரின் உடலை கண்டுபிடித்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் பூனம் ஜாட் அவரது நண்பர் ராம் பிரதாப் உள்ளிட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரையே கொலை செய்து புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CRBF woman police arrested with boy friend for kill husband in delhi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->