மெக்சிகோ || பேருந்து மீது டேங்கர் லாரி மோதி 19 பேர் பலி..! - Seithipunal
Seithipunal


பேருந்து மீது டேங்கர் லாரி மோதி 19 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோவில் உள்ள ஹிடால்கோ நகரில் இருந்து மான்டேரியை நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த சாலை வழியாக எரிபொருள் ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி ஒன்று பேருந்தின் மீது மோதியது. இதனால், டேங்கர் லாரியில் இருந்த எரிப்பொருள் வெடித்தது.

இதில், டேங்கர் லாரியும் பேருந்தும் தீபிடித்து எரிந்தது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 18 பேரும் லாரி ஓட்டுநரும் பரிதாபமாக பலியானர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பலி எண்ணிக்கை உயரும் எனவும் அஞ்சப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bus and tanker lorry accident at mexico


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->