ஆஸ்திரியாவின் கிராஸ் நகர் பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 8 பேர் பலி!
Australia schools shoot
ஆஸ்திரியாவின் கிராஸ் நகரில் இன்று ஒரு உயர்நிலைப்பள்ளியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது.
இதில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தை நிகழ்த்திய நபர் பின்னர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்ததாவது, தகவல் கிடைத்தவுடன் காலை 10 மணிக்கு (உள்ளூர் நேரம்) சிறப்புப் படையினர் அனுப்பப்பட்டனர்.
மாணவர்களும் பள்ளி ஊழியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். பலியானோரின் அடையாளம் தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வசிக்கும் கிராஸ், ஆஸ்திரியாவின் இரண்டாவது பெரிய நகரம் என குறிப்பிடத்தக்கது.