ஆஸ்திரியாவின் கிராஸ் நகர் பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 8 பேர் பலி! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரியாவின் கிராஸ் நகரில் இன்று ஒரு உயர்நிலைப்பள்ளியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது.

இதில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தை நிகழ்த்திய நபர் பின்னர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்ததாவது, தகவல் கிடைத்தவுடன் காலை 10 மணிக்கு (உள்ளூர் நேரம்) சிறப்புப் படையினர் அனுப்பப்பட்டனர்.

மாணவர்களும் பள்ளி ஊழியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். பலியானோரின் அடையாளம் தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வசிக்கும் கிராஸ், ஆஸ்திரியாவின் இரண்டாவது பெரிய நகரம் என குறிப்பிடத்தக்கது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Australia schools shoot 


கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!



Advertisement

கருத்துக் கணிப்பு

சாதி, மதம் இல்லை என சான்றிதழ்! அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!




Seithipunal
--> -->