மீண்டும் அதிர்ந்த அந்தமான் நிகோபார் தீவுகள்: 4.4 ரிக்டர் பதிவு! - Seithipunal
Seithipunal


அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை 4.4 ரிக்டர் அலகுகள் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கம் அந்தமானில் இன்று காலை சுமார் 7.06 மணிக்கு கடல் பகுதியில் 11 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தினால் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருள் செய்தல் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. 

இதற்கு முன்னதாக கடந்த 10 ஆம் தேதி அந்தமான் தீவுகளில் 4.3 ரிக்டா் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பொதுவாக சிறிய அளவிலான நிலநடுக்கம் என்பதால் பெரிய அளவில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Andaman Nicobar Islands earthquake


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->