ஒடிசா ரயில் விபத்து.. அமெரிக்கா முழுவதும் அஞ்சலி - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் சென்னை பெங்களூர் ரயில்கள் என 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த உடலுறவில் சிக்கிய இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 900 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த ரயில் விபத்து காரணமாக 95 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த ரயில் விபத்தில் உயிரிழந்த ஒடிசாவைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாய்க் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே ஒடிசா ரயில் விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், 'ஒடிசா ரயில் விபத்தில் தங்களது நேசத்திற்குரியவர்களை இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவும் அமெரிக்காவும் கலாச்சார ரீதியாக நல்ல பிணைப்பு கொண்ட நாடுகள் ஆகும். இந்தியாவில் நிகழ்ந்த இந்த சோகமான நிகழ்விற்கு அமெரிக்கா முழுவதும் அஞ்சலி கடைப்பிடிக்கப்படுகிறது இந்திய மக்களோடு நாங்கள் இருக்கிறோம்' என தெரிவித்துள்ள.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

American president condolences to odisaa train accident


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->