அடேங்கப்பா ஆச்சரியம்! 900 முறை நிலநடுக்கம் பதிவான ஜப்பான் நாடு...! பீதியில் உறைந்த மக்கள்!
Amazing Japan has recorded 900 earthquakes People are in panic
ஜப்பான் நாடு பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளதால், அங்கு அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படுகிறது. அவ்வகையில், அங்குள்ள டோகாரா தீவில் கடந்த 2 வாரங்களில் அங்கு 900-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

இதில் மிகப்பெரிய நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவானது. இதைத் தொடர்ந்து அதிஷ்டவசமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் அந்நாட்டில் விடுக்கப்படவில்லை.
அதேபோல, எப்போது வேண்டுமானாலும் வெளியேற தயாராக இருக்குமாறு பொதுமக்களை அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்காக டோகாரா கடற்கரையில் படகுகள் அவசரக்காலத்திற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் அங்கு வசிக்கும் மக்க்கள் பீதியில் உறைந்து காணப்படுகின்றனர்.
English Summary
Amazing Japan has recorded 900 earthquakes People are in panic