ஆப்பிரிக்கா | தற்கொலை படையால் பறிபோன 15 உயிர்! இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் மக்கள்! - Seithipunal
Seithipunal


ஆப்பிரிக்கா,  சோமாலியா பெலிட்வி நகரில் நேற்று வெடிமருந்து ஏற்றி கொண்டு லாரி ஒன்று அங்குள்ள சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்தது. 

அப்போது திடீரென வெடிபொருள்கள் வெடித்து சிதறியது. லாரியில் இருந்த வெடிபொருள்களை வெடிக்க செய்தது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்டனர். 

இந்த தாக்குதலினால் அந்த பகுதியைச் சேர்ந்த 15 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 5 பேர் காவல்துறை அதிகாரிகள். 

மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த தாக்குதல் நடைபெற்ற இடத்தில் இருந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால் இடுப்பாடுகளில் பலரும் சிக்கி தவிக்கின்றனர்.

அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என தெரிவிக்கப்படுகிறது. 

இந்த பயங்கர தாக்குதலில் ஈடுபட்டது யார் என தெரியவில்லை. எந்த பயங்கரவாத அமைப்பும் இதற்கு பொறுப்பேற்கவில்லை என்பதால் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Africa15 lives lost by suicide squad


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->