மெக்சிகோவில் இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு - 8 பேர் பலி, 5 பேர் காயம் - Seithipunal
Seithipunal


வடக்கு மெக்சிகோவில் உள்ள இரவு கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

மெக்சிகோவின் ஜகாடெகாஸிலிருந்து தென்மேற்கே 60 கிலோமீட்டர் தொலைவில் ஜெரெஸ் நகரில் உள்ள 'எல் வெனாடிடோ' என்ற இரவு கேளிக்கை விடுதிக்குள் இரண்டு வாகனங்களில் ஆயுதங்களுடன் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது கண்முடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்கள் கிளப் ஊழியர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இந்த துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

8 killed 5 injured in shooting at night club in Mexico


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->