சோமாலியாவில் பயங்கரவாதிகள் கடும் தாக்குதல் - 54 உகாண்டா ராணுவ வீரர்கள் பலி - Seithipunal
Seithipunal


சோமாலியாவில் பயங்கரவாதிகள் நடத்திய கடும் தாக்குதலில் 54 உகாண்டா ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் ஆளும் சோமாலிய கூட்டாட்சி அரசை, ஜிஹாதி போராளிகள் அல்-ஷபாப் அமைப்பினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். மேலும் பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருக்கும் அல்-ஷபாப், சோமாலியா ராணுவத்தின் மீது அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் உகாண்டா நாட்டைச் சேர்ந்த அமைதிப்படையும் அல்-ஷபாப் அமைப்பிற்கு எதிராக போராடி வருகின்றனர். இந்நிலையில் சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் இருந்து தென்மேற்கே அமைந்துள்ள புலமாரர் ராணுவ தளத்தை குறிவைத்து அல்-ஷபாப் அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த பயங்கர தாக்குதலில் 54 உகாண்டா வீரர்கள் உயிரிழந்து உள்ளனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி, ராணுவ தளத்தின் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் 54 உகாண்டா அமைதிப்படை வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் புலமாரர் பகுதியை சோமாலியா ராணுவ படைகள் மீட்டதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

54 Uganda soldier died as terrorists attack in somalia


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->