ஆப்கானிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்.! - Seithipunal
Seithipunal


கடந்த பிப்ரவரி 6 அன்று, துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் சிக்கி 50, 000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல நாடுகளில் நிலநடுக்கம் ஏற்படுவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் பைசாபாத் பகுதியில் இன்று அதிகாலை(ஞாயிற்றுக்கிழமை) 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் நகருக்கு வடகிழக்கே 273 கிலோமீட்டர் தொலைவில், அதிகாலை 2.14 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையம் 180 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இதற்கு முன்பாக கடந்த வியாழக்கிழமை காலை 6.07 மணியளவில் ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் இருந்து 265 கிலோமீட்டர் தொலைவில் 6.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

4 point 3 magnitude earthquake hits Afghanistan


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->