மெக்சிகோ || ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 வீரர்கள் பலி.! - Seithipunal
Seithipunal


மெக்சிகோவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் மூன்று வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

வட அமெரிக்க நாடான மெக்ஸிகோவில், கடற்படைக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் கவுதமலா நாட்டின் எல்லைப் பகுதிக்கு அருகே தீவிர வான்வழி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தது.

இந்நிலையில் ஹெலிகாப்டர் வளைகுடா மாகாணமான தபாஸ்கோவின் சென்ட்லா நகருக்கு அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது .

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றனர். ஹெலிகாப்டரில் விமானிகள் உட்பட ஐந்து கடற்படை வீரர்கள் பயணம் செய்த நிலையில், இந்த கோர விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இரண்டு பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்திற்கான காரணம் தெரியாததால், மெக்சிகோ கடற்படை தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 died in navy helicopter crash in Mexico


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->