மெக்சிகோ || பாரில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு.! 12 பேர் பலி - Seithipunal
Seithipunal


மெக்சிகோவில் பாரில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மத்திய மெக்சிகோவின் குவானாஜுவாட்டோ மாகாணத்தில் உள்ள இராபுவாட்டோ நகரில் பார் ஒன்றிற்கு புகுந்த மர்ம நபர்கள் திடீரென அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இந்த பயங்கர துப்பாக்கி சூடு சம்பவத்தில் 6 பெண்கள் மற்றும் 6 ஆண்கள் என மொத்தம் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பாதுகாப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், ஒரு மாதத்திற்குள் குவானாஜுவாடோ மாநிலத்தில் நடந்த இரண்டாவது பெரிய துப்பாக்கிச் சூடு சம்பவம் இதுவாகும். முதல் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நகர மேயர் உட்பட 18 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

12 kille in Shooting at a Mexican bar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->