மெக்சிகோ பாரில் பயங்கர துப்பாக்கிச் சூடு - 10 பேர் பலி, 5 பேர் காயம் - Seithipunal
Seithipunal


மெக்சிகோவில் உள்ள மதுபான பாரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மெக்சிகோவின் மத்திய மாநிலமான குவானாஜுவாடோவில் உள்ள 'எல் எஸ்டாடியோ' என்ற மதுபான விடுதியில் புகுந்த மர்ம கும்பல் ஒன்று அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டினால் மதுபான பாரில் இருந்த அனைவரும் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இருப்பினும் இந்த பயங்கர துப்பாக்கி சூட்டில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் 7 ஆண்கள், 3 பெண்கள் உயிரிழந்ததாகவும், மர்ம கும்பல் செலயா மற்றும் க்வெரெட்டாரோ நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலை வழியாக மதுக்கடைக்குள் நுழைந்து வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்திய மர்மகும்பல் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 killed 5 injured in mexico bar shooting


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->