மிகமிகமிக கனமழை.! 5 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை.!  - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் இந்த நிலையில், அம்மாநிலத்தின் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

அரபிக்கடல் மற்றும் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

இந்த நிலையில், கேரள மாநிலத்தின் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கையை, இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் விடுத்துள்ளது.

அதன்படி, பத்தினம்திட்டா, எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, திருச்சூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு சிவப்புநிற வெள்ள அபாய எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

மேலும், திருவனந்தபுரம், வயநாடு, கொல்லம், பாலக்காடு, ஆழப்புழா, மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

red alert in kerala 5 districts


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->