தமிழகத்தில் "வடகிழக்கு பருவமழை" துவங்கியது! முதல் நாளிலேயே கனமழை எச்சரிக்கை!
Northeast Monsoon has started in Tamil Nadu
தென்மேற்கு மற்றும் அதன் ஒட்டி உள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய வங்க கடல் பகுதியில் நீடித்து வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்திற்குள் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் நாளான இன்று கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்க கடல் பகுதியில் சூறைக்காற்று சுமார் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும் எனவும், மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறைக்காற்று 100 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
Northeast Monsoon has started in Tamil Nadu