அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்.!
next three hours heavy rain to 12 districts in tamilnadu
அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்.!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் செப்டம்பர் 30 தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
"தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் செப்டம்பர் 30 வரை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இரவு முதல் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உட்பட 12 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
next three hours heavy rain to 12 districts in tamilnadu