தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை..! வானிலை ஆய்வு மையம்...!
Next 3 hours thunderstorm moderate rain in 22 districts of tamilnadu
தமிழகத்தில் இடி, மின்னலுடன் 22 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில், தமிழகத்தின் ஈரோடு, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், பெரம்பலூர், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தஞ்சாவூர், திருவாரூர், கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 22 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Next 3 hours thunderstorm moderate rain in 22 districts of tamilnadu