சூறாவளி காற்று வீசும்; காரைக்காலில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை! - Seithipunal
Seithipunal


சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் காரைக்காலில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் நேற்று இரவிலிருந்தே மழை பெய்துகொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை உள்ளிட்ட இடங்களில் இதனால் வெப்பம் தனிந்துள்ளது. இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழையை அடுத்து சில மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தென்கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று, மணிக்கு 45-65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனையடுத்து காரைக்கால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. காரைக்கால் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல தடை விதித்து காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Hurricane winds ; Fishermen are prohibited from going to the sea in Karaikal!


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->