9 மாவட்ட மக்களே உஷார்! இன்றும் கனமழை பெய்யும்! வானிலை மையம் எச்சரிக்கை!
Heavy rain occurred 8 districts in TamilNadu today
தமிழகத்தின் வளிமண்டலத்தில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேகமாக காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோன்று இன்று சென்னை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் கன மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை தமிழகத்தில் அதிகபட்சமாக பூந்தமல்லியில் 11 செமீ, செங்கம் 10 செ.மீ, ஆர்.கே பேட்டை, வானூர் தலா 9 செமீ, திருத்தணி, போளூர், திருவாடானை, சங்கராபுரம் ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மேலும் வட வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக உள்ளதால் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Heavy rain occurred 8 districts in TamilNadu today