வங்கக்கடல் பகுதியில் உருவாகிறது "புயல்".! வானிலை ஆய்வு மையம் தகவல்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வருகின்ற 6ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல் மேலடுக்கு சுழற்சி உருவாகி, 7,8 ஆகிய தேதிகளில் வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலசந்திரன் நேற்று தெரிவித்தார். இந்நிலையில் வங்கக்கடலில் புயல் உருவாக உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதில், தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 7ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும், இது தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வடக்கில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, புயலின் தன்மை, நகர்வு திசை உள்ளிட்டவை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A storm is forming in the Bay of Bengal


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->