அடேங்கப்பா..! தமிழகத்தில் 4 இடங்களில் சதம் அடித்த கோடை வெயில்..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து கொளுத்தி வருகிறது.  ஈரோடு மாவட்டத்தில் அதிகப்படியான வெப்பநிலை பதிவாகியுள்ளது. தென் இந்திய வளிமண்டல பகுதிகளின் மேல் நிலவும் கீழடுக்குகளில் கிழக்கு திசை மற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக தென்காசி, நாகபட்டினம், சிவகங்கை, நீலகிரி, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்து வருகிறது. 

அதேபோன்று பிற மாவட்டங்களிலும் அவ்வப்பொழுது லேசானது முதல் மிதமான கோடை மழை பெய்து வருவதால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் இன்று தமிழ்நாட்டில் 4 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் பதிவாகியுள்ளது.

அதன்படி கரூர் மாவட்டம் பரமத்தியில் 103 டிகிரி பாரன்ஹீட்டும், ஈரோடு மாவட்டத்தில் 101 டிகிரி பான்ஹீட்டும், சேலம் மற்றும் மதுரை விமான நிலையத்தில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் இன்று பதிவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 places in Tamil Nadu recorded 100 degrees Fahrenheit


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->