சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் பரவலாக மழை.!!
24 jan rain in tamilnadu
சென்னையில் இன்று காலை முதல் ஓரளவு மேகமூட்டத்துடன் வானிலை நிலை வருகிறது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு மற்றும் அதிகாலை மிதமான மழை பெய்தது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கிண்டி, மாம்பழம், எழும்பூர், போரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது.
இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ்-ஐ ஒட்டி இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.