அடுத்த 3 மணி நேரம் முக்கியம்.. "இடி மின்னலுடன் வெளுக்கப் போகும் மழை".. உங்க மாவட்டம் இருக்கா பாருங்க..!! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வாட்டி வதைத்து வந்த நிலையில் தென்னிந்திய வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்று மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவி வருவதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது.

இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நீலகிரி, ஈரோடு, விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், கரூர் ஆகிய 15 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

15 districts in TamilNadu will receive moderate rain for next 3hours


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->