22 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் குடமுழுக்கு நடத்தச் சொல்லி மக்கள் போராடிய வீடியோ! தங்கர் பச்சான் - Seithipunal
Seithipunal


என்றும் மாறாத தமிழின் நிலை.. தமிழர்களின் நிலை என்று, "தென்றல்" திரைப்பட கட்சியை வெளியிட்டு தங்கர் பச்சான் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் அவரின் பதிவில், "உலகமே வியக்கும் வண்ணம் கலைகளின் மொத்த வடிவமாக இரவும் பகலுமாக அரும்பாடுபட்டு தமிழர்கள் கோவில்களை உருவாக்கினார்கள்! 

அன்று ஒரு கல்லையோ, ஒரு தட்டு  மண்ணையோ சுமக்காதவர்கள் சிலை வடித்து  கோவிலை கட்டி  முடித்ததும் கோவிலுக்குள் வந்து உட்கார்ந்து கொண்டார்கள். 

அப்படிப்பட்டவர்களிடம் தான் இன்றைக்கு  தமிழில் குடமுழுக்கு செய்வதற்காக அனுமதி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் நம் அரசியல் வாதிகள். 

தமிழ் நாட்டில் தமிழர்கள் உருவாக்கிய தமிழ் கோயில்களுக்கு தமிழில் வழிபாடு செய்யவும், குடமுழுக்கு செய்யவும் கெஞ்சும் நிலையை உருவாக்கி தமிழில்  குடமுழுக்கு நடத்த சொல்லி அரசியல்வாதிகள் இன்று நாள்தோறும் அறிக்கை தந்து கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் "தென்றல்" (2003, இயக்கம்- தங்கர் பச்சான்) திரைப்படத்தில் 22 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் குடமுழுக்கு நடத்தச் சொல்லி மக்கள் போராடிய காட்சி இது" என்று தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thendral movie thangar bachan tamil kudamuzhakku


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->