விரைவில் மனிதர்கள் ஆழ்கடலுக்கு செல்லும் "சமுத்ராயன்" திட்டம்...!- ஐ.சி.ஏ.ஆர் பாலாஜி ராமகிருஷ்ணன்
Samudrayan project that will soon take humans deep sea ICAR Balaji Ramakrishnan
கடந்த 2021-ம் ஆண்டு,மனிதர்களை கடலில் 6,000 மீட்டர் ஆழத்துக்கு அனுப்பும் ''சமுத்ராயன்'' திட்டமானது தொடங்கப்பட்டது.இந்த திட்டத்தின் முக்கிய காரணம், ஆழ்கடலில் இதுவரை கண்டறியப்படாத கனிமங்கள் போன்ற ஆழ்கடல் வளங்களை ஆய்வு செய்வதற்கானது. இதற்காக 3 பேர் அமர்ந்து செல்லும் வகையில் 'மத்ஸ்யா' என்ற ஆழ்கடல் நீர்மூழ்கி ஆய்வு வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கேரள மாநிலம் கொச்சியிலுள்ள ஐ.சி.ஏ.ஆர்.-மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் ''பாலாஜி ராமகிருஷ்ணன்'', 'சமுத்ரயான்' திட்டம் குறித்து உரையாடினார்.
பாலாஜி ராமகிருஷ்ணன்:
அப்போது அவர் தெரிவித்ததாவது,"ஆழ்கடலில் 6000 மீட்டர் வரை சென்று ஆய்வு செய்வதற்கான 'சமுத்ரயான்' திட்டம் மூலம் 3 விஞ்ஞானிகள் 'மத்ஸ்யா' நீர்மூழ்கி ஆய்வு வாகனத்தில் செல்லவுள்ளனர். இந்த திட்டம் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது.
இப்பணி இந்தியாவின் ஆழ்கடல் ஆராய்ச்சியில் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்றும், ஆழ்கடலிலுள்ள வளங்களை மதிப்பிடுவதற்கும், விரிவான கடல் கண்காணிப்பு மற்றும் ஆழ்கடல் சுற்றுலாவின் சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஆழ்கடல் மண்டலத்திலிருந்து மாதிரிகளை சேகரிப்பதில் இந்த திட்டம் முக்கிய பங்கு வகிக்கும். மேலும் ஆழ்கடலிலுள்ள உயிரினங்களின் தனித்துவமான பண்புகளையும், அங்குள்ள நீரையும் புரிந்துகொள்ள விஞ்ஞானிகளுக்கு வாய்ப்புகளை வழங்கும்" எனத் தெரிவித்துள்ளார்.இது தற்போது இந்திய மக்களால் பேசப்பட்டு வருகிறது.
English Summary
Samudrayan project that will soon take humans deep sea ICAR Balaji Ramakrishnan