அரக்கோணத்தில் வாலிபர் வெட்டிக் கொலை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


அரக்கோணத்தில் வாலிபர் வெட்டிக் கொலை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் அடுத்த சித்தேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் விக்னேஷ்-யாமினி தம்பதியினர். திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்ற நிலையில், விக்னேஷ் நேற்றிரவு சுமார் 11 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

அதன் பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே, விக்னேஷ் இன்று அதிகாலை அதே பகுதியில் உள்ள மாந்தோப்பு அருகே சடலமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்த அவ்வழியாக சென்ற நபர்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர். 

அதன் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விக்னேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் இதுதொடர்பாக, விக்னேஷின் மனைவி யாமினி அளித்த புகாரின் பேரில் அரக்கோணம் தாலூகா போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth murder in ranipet arakonam


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->