தீண்டாமைச் சுவரை அகற்றக்கோரி அமைச்சர் ராஜ்மோகன் காலில் விழுந்து இளைஞர் மனு!
Youth Kneels Before Minister Rajmohan at Erode Book Fair Over Untouchability Wall
ஈரோட்டில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனின் காலில் விழுந்து இளைஞர் ஒருவர் கோரிக்கை மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீண்டாமைச் சுவரை அகற்றக் கோரிக்கை
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்ற அந்த இளைஞர், தங்கள் பகுதியில் பட்டியலினக் குழந்தைகள் கல்வி கற்பதற்குப் பெரும் தடையாக இருக்கும் தீண்டாமைச் சுவரை உடனடியாக அகற்றக் கோரி, அமைச்சரின் காலில் விழுந்து மண்டியிட்டவாறு மனுவைச் சமர்ப்பித்தார்.
அமைச்சரின் பதில் & தொடர் நடவடிக்கை
மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் ராஜ்மோகன், "நீங்கள் என்னைப் பற்றித் தவறாக விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்த போதிலும், இந்த மனுவின் மீது நேர்மையான நடவடிக்கை எடுக்கப்படும். இதனை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கிறேன்" என உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த காவல்துறையினர் அந்த இளைஞரை வெளியேற்றினர். ஏற்கனவே பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினாலேயே, அமைச்சரிடம் நேரில் முறையிட்டதாக அந்த இளைஞர் தெரிவித்தார்.
English Summary
Youth Kneels Before Minister Rajmohan at Erode Book Fair Over Untouchability Wall