குளியல் அறையில் மின்சாரம் தாக்கி இளைஞர் பரிதாப பலி.. ஈரோட்டில் நடந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


குளியல் அறையில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், பெரிய கொடிவேரி பகுதியில் வசித்து வருபவர் ராஜா. இவர் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், சம்பவதன்று குளியல் அறையில் குளிக்க சென்ற போது அங்குள்ள இரும்பு கம்பியில்                 ஈரத்துணியை காயப்போட்டுள்ளார்.

அப்போது, அவர் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக மீட்டு மருத்துவமனக்கு கொண்டு சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தநிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth Death In Erode


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->