குளியல் அறையில் மின்சாரம் தாக்கி இளைஞர் பரிதாப பலி.. ஈரோட்டில் நடந்த சோகம்..!
Youth Death In Erode
குளியல் அறையில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், பெரிய கொடிவேரி பகுதியில் வசித்து வருபவர் ராஜா. இவர் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், சம்பவதன்று குளியல் அறையில் குளிக்க சென்ற போது அங்குள்ள இரும்பு கம்பியில் ஈரத்துணியை காயப்போட்டுள்ளார்.
அப்போது, அவர் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக மீட்டு மருத்துவமனக்கு கொண்டு சென்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தநிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.