திருமணமாகாத விரக்தியில் தீக்குளித்த இளைஞர்.. சேலம் அருகே நடந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


திருமணமாகாத ஏக்கத்தில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம், வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் மோகனசுந்தரம். இவர் அங்குள்ள கண்ணாடி கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை என கூறப்படுகிறது. சம்பவதன்று, தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் திடீரென உடல் மீது தீவைத்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அவருக்கு நீண்ட நாட்கள் ஆகியும் திருமணமாகாததால் அவர் மன உளைச்சலில் இருந்ததாகவும் அதனால், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Youth Committed Suicide Due to Marraige


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->