மதுரை அருகே பரிதாபம்.! பெற்றோர் கண்டிப்பு... ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை.!
Youth committed suicide by jumping in front of a train in madurai
மதுரை மாவட்டத்தில் வீட்டிற்கு தாமதமாக வந்ததை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் ரயில்வே சுரங்கப் பாதையின் மேலே உள்ள தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதைப்பார்த்தவர்கள் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், இறந்து கிடந்த வாலிபர் திருமங்கலம் தமிழ்த்தாய் நகர் பகுதியை சேர்ந்த கதிரவன்(23) என்பது தெரியவந்தது.
மேலும் கதிரவன் தினமும் இரவு நேரங்களில் வீட்டிற்கு தாமதமாக வந்ததால், அவரைப் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் வீட்டில் இருந்து கோபித்துக் கொண்டு வந்த கதிரவன், மனவேதனையில் வடகரைச்சாலையில் உள்ள சுரங்கப்பாதை அருகே பாலத்தின் மீது ஏறி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Youth committed suicide by jumping in front of a train in madurai