கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்ற மனைவி..!! மன உளைச்சலில் கணவன் தற்கொலை..!!
Youth commits suicide after wife split up
மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் கணவன் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக காவல்துறையினர்.
விருதுநகர் மாவட்டம், ஆலங்குளம் பகுதியில் வசித்து வருபவர் தீபக் . இவருக்கு திருமணமாகி ரேஷ்மா என்ற மனைவி உள்ளார். இவர்கள் மதுரை ஜெஹிந்த்புரம் பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கணவன் மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து ரேஷ்மா கணவனிடம் கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனால் தீபக் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில், சம்பவதன்று யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் தீபக் விஷம் குடித்து தற்கொலைக்கு செய்துள்ளார்.
இதனை அடுத்து தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
English Summary
Youth commits suicide after wife split up